வந்த விருந்தினர் வகையுடன் உண்டனர் - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
எந்தை உறவினர் என்னிடம் அன்பினைக் கொண்டே
சிந்தை மகிழ்ந்துமே திருவுடன் வாழ்த்தினர் இனிதே!
வந்த விருந்தினர் வகையுடன் உண்டனர் வாழ்த்தி;
விந்தை வேறெதும் வியப்பிலை கொண்டனன் மகிழ்வே!
– வ.க.கன்னியப்பன்