என் இதழ்களில் உன் முத்தத்தின் ஈரம் 555
***என் இதழ்களில் உன் முத்தத்தின் ஈரம் 555 ***
ப்ரியமானவளே...
பூமியில் திசைகள் நான்கு நான் காணும்
திசைகள் எங்கும் நீயே தெரிகிறாய்...
எந்த திசையை நோக்கி
உன்னை காண நான் வருவது...
உன்னைத்தேடி வரவில்லையென்று
கோபம் கொள்கிறாய்...
திசைகள் தெரியாமலே
நான் தவிக்கிறேனடி கண்ணே...
என் கண்களில்
காட்சி பிழையா...
என் விழியில் பதிந்த
உன் அழகு பிம்பமா...
நான் திரும்பும்
திசையெங்கும் நீ...
விழிகள் புதிர் போடுதா
இமைகள் கண்ணாம்பூச்சி ஆடுதா...
யாரிடமும் நான்
அறிந்ததில்லை உன் பாசம்...
யாரிடமும் நான் உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகம்...
கன்னத்தில் கொடுத்த
முத்தத்தின் சுகம்...
நெற்றியில் கொடுத்த
முத்தத்தின் சுகம்...
உன்னிடமே கண்டேன்
அன்பின் சுகத்தை...
இதழ்களோடு இதழ்கள்
சேர்க்கும் போதுதான்...
முத்தத்தின் சுகமும்
சுவையும் பேரின்பமடி...
எப்போது உன்னை சந்தித்து
முத்தத்தின் சுவையை உணரமுடியும்...
சொல்லடி
என் கண்ணே.....
***முதல்பூ.பெ.மணி.....***