அம்மா
குழந்தையாய்…
சிறுமியாய்…
குமரியாய்…
மனைவியாய் வளரும்
உறவு
தாய்மையில்தான்
தன்னிறைவு பெறுகிறது..!
கொஞ்சும்
போது தனக்கும்
ஆனந்தம்
வருவதாலேயே
தகப்பன் கூட
குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்…!
நள்ளிரவில்
குழந்தையின்
அழுகை
எல்லோருக்கும்
எரிச்சல்
தாய்மைக்குத்தான்
பதட்டம்..!