பார்வையால் காதல் தீயை பற்ற வைத்தவளே 555

***பார்வையால் காதல் தீயை பற்ற வைத்தவளே 555 ***


என்னுயிரே...


மழையில் நனைந்த தீக்குச்சியை
போல இருந்த என்னை...

உன் பார்வை
என்னும் ஒளிவீசி...

எனக்குள் காதல்
தீயை பற்ற வைத்தாய்...

நெருப்பில் சிலிர்த்து எழும்
பீனிக்ஸ் பறவைபோல
...

ஹார்மோன்கள் எல்லாம்
சிலிர்த்து எழ...

இதயத்துடிப்பு வேகமெடுக்க
விழிகளை உன்மீது வைத்தேன்.
..

கண்டதும் காதல்
சினிமாவில் ரசித்து இருக்கிறேன்...

எனக்கும் கிடைக்குமா
நான் யோசித்
து இருக்கிறேன்...

எத்தனையோ
பாவைகளின் பார்வைகள்...

என்மீது விழுந்த போதெல்லாம்
சிலிர்க்காத என் ரோமங்கள்...

உன் முதல் பார்வையில்
என் ரோமங்கள் சிலிர்த்ததடி...

ஒற்றை காலில் ஒருமீனுக்காக
காத்திருக்கும் கொக்கை போல...

உன் வருகைக்காகத்தான் பல
ஆண்டுகள் காத்திருந்தேனோ...

எனக்கே
தெரியவில்லை...

காலம் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை...

நான் காத்திருந்தேன்
னக்காகத்தான் என்று தெரியாமலே...

பூக்களை
சூடிக்கொள்ளும் பூவையே...

உன் கூந்தலில் நான் சூட்ட
சம்மதம் கொடுப்பாயா என்
ழகே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (2-Nov-22, 5:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 388

மேலே