மணமகள்
மணமகள்.
பொட்டு இட்டு வந்தாள்
மணமகள்,
புன்னகையையும்
அழைத்து வந்தாள்.
மலர் சூடி வந்தாள்,
என் தங்கையை
அவள் தோழியாக
அழைத்து வந்தாள்.
பட்டு புடவை, நகை
அணிந்து வந்தாள்,
நாணத்துடன் என் அருகில் அமர்ந்தாள்.
கெட்டு மேளம்,
நாதஸ்வரம் முழங்க,
சூழ்ந்திருந்த சுற்றம்
எல்லாம் வாழ்த்திட
"மணமகள்"
மனைவி ஆனாள்
ஆக்கம்
சண்டியூர் பாலன்.