என்றென்றும் ஆனந்தமே - புதுக்கவிதை
புதிதாய்ப் பிறந்த பச்சிளம்
குழந்தையைக் காண்பது
ஆனந்தமே;
கனவுகளுடன் தூங்கும்
குழந்தையின் முகத்தைக் காண்பது
ஆனந்தமே;
தவழும் குழந்தை கைகள் முழங்கால்களை
ஊன்றி, தள்ளாடி நகர்வதைக் காண்பது
ஆனந்தமே;
நடைபயிலும் குழந்தையின்
கைபிடித்து நடப்பதும், காண்பதும்
ஆனந்தமே;
குழந்தையின் மழலை கேட்பது
ஆனந்தமே; குழந்தை கேட்கும் கேள்விகள்
அர்த்தமுள்ளதும் ஆனந்தமானதுமே;
சின்னஞ்சிறு குழந்தை, தோழர்களுடன்
சுற்றித் திரிந்து விளையாடுவதைக் காண்பது
என்றென்றும் ஆனந்தமே!
பள்ளிக்குச் சீருடையில்,
கையசைத்துச் செல்வதைக் காண்பது
ஆனந்தமே;
பள்ளியில் கற்று வந்த சொற்களை,
பாடலை, ஆடலை கேட்பதும் காண்பதும்
ஆனந்தமே;
ஒவ்வொரு நாளும் அவர்கள்
உடலில், அறிவில் வளர்வதைக்
காண்பது என்றென்றும் ஆனந்தமே;
பேரானந்தமே.