வேண்டும்
காத்திருப்புக்கள்
கைகூட வேண்டும்...
ஏக்கங்கள்
இறங்க வேண்டும்...
வீழ்ச்சிகள்
ஓய வேண்டும்...
முயற்சிகள்
தொடர வேண்டும்...
வெற்றிகள்
கிட்ட வேண்டும்...
சோதனைகள்
மறைய வேண்டும்...
சாதனைகள்
புரிய வேண்டும்...
துன்பங்கள்
நீங்க வேண்டும்...
மகிழ்ச்சிகள்
பொங்க வேண்டும்...
பொறாமைகள்
களைய வேண்டும்...
துரோகங்கள்
தூரவீசப்பட வேண்டும்...
கனவுகள்
மெய்ப்பட வேண்டும்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா