ஓவியத்தமிழ்
எழுத்தறிவித்தவன்
இறைவன்!
எண்ணம்
அறிவித்தவன்?
முத்தமிழில்
முதல் தமிழ்
எது?
இயலா?
இசையா?
நாடகமா?
எத்தமிழ்
இதைச்சொல்லி
செந்தமிழானது....?
கீறலிள்
பிறந்தது கிறுக்கல்கள்....
கிறுக்கல்களில்
பிறந்தது ஓவியம்...!
ஓவியத்தில்
பிறந்தது மொழி....!
மொழியில்
வந்தது தமிழ்!
என் தமிழ்
ஓவியத்தமிழ்...!