காதலுக்காக கெஞ்ச மனமில்லை 555
***காதலுக்காக கெஞ்ச மனமில்லை 555 ***
ப்ரியமானவளே...
மண்ணுக்குள் விதையிட்டு
மூடி வைத்தாலும்...
மண்ணைக் கிழித்துக்கொண்டு
முளைக்கும் விதைகள்...
கண்ணுக்குள் உன் நினைவுகளை
மூடி வைத்தாலும்...
இமைகளை மீறி
வெளியேறும் கண்ணீர் துளிகள்...
என் காதலுக்காக
உன்னிடம் கெஞ்ச மனமில்லை...
என் உணர்வுகளை
புரியவைக்கவும் விரும்பவில்லை...
என் இன்பத்
துன்பங்களை பகிர்வதற்கும்...
என் திறமைகளை
வளர்த்துக்கொள்ள...
ஊன்று கோலாகவும் இருக்க
ஒருதுணையை தேடினேன்...
நீ வந்தாய் என்
வாழ்வின் துணையாகவும்...
அன்று உனக்கு
எல்லாமாகவும் இருப்பேன் என்றாய்...
இன்று எல்லாம்
எதிர்மாறாக நீ...
உன்னை
இழந்துவிடக்கூடாது என்றே...
இந்த நிமிடம்வரை
போராடிக்கொண்டு இருக்கிறேன்...
நீயோ என்னை முழுவதுமாக
மறந்து செல்ல நினைக்கிறாய்...
மீதி நாட்களை இனி
உனக்காக அல்ல...
எனக்காகவே
செலவழிக்க போகிறேன்.....
***முதல்பூ.பெ.மணி.....***