தடுமாறி நிற்குதடி
உன்னைப் பற்றி
கவி ஒன்றெழுதிட
எண்ண அலைகள்
மனக் கதவை முட்டிமோத
இதோ
எழுதத் தொடங்கிவிட்டேன்.
எழுதினேன்...கிறுக்கினேன்...
அடித்தேன்...திருத்தினேன்...
மேலும் எழுதினேன்.
ஆனால் அத்தனையும்
பொய்யாய்த் தோன்றுதடி.
என் தாய் தமிழை
மறக்கடிக்க என்ன
மாயமடி செய்துவிட்டாய்?
தமிழே இங்கு
தடுமாறி நிற்குதடி.