ஓடிக்கொண்டே இரு

நெறிக்கும் பல கவலைகள்
நெருங்கும் பல தொல்லைகள்
அறுக்கும் சொந்தபந்தங்கள்
நொறுக்கும் நட்புவட்டங்கள்
பறக்கும் காதல் காவியங்கள்
இறக்கும் மனிதாபிமானங்கள்...
இதுதான் இன்றைய உலகம்
இன்றைய எதார்த்த வாழ்க்கை.
அத்தனையையும் நொறுக்கவே
விழிப்புடன் இரு...
வீறுகொண்டு எழு...
உனக்காக போராட
உன்னால் மட்டும்தான் முடியும்.
துள்ளி எழு தோழா..
இலக்கை அடைய
வெகு தூரமுண்டு...
துவண்டுவிடாதே!
ஓடு...ஓடு...
ஓடிக்கொண்டே இரு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Nov-22, 7:29 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 85

மேலே