சுமையிலா வாழ்வு

சுமையிலா வாழ்வு
********************
தேவைகள் வாழ்வைத் திருடுவ தாலே திசைகளற்றுச்
சேவையிற் காலம் செலவுக ளாகச் சிறகொடிந்து
நோவையும் பெற்று நொடிவதற் கென்றே நுணுக்கமுடன்
நாவைய டக்கும் நரிக்குண வாழ்க்கை நமக்குளதே!
*
அழுகிற வானம் அவனியில் வீழ்ந்து அகந்தவிக்க
உழுவதற் குள்ளே உமியினை நீங்கி உலைக்குவர
எழுகிற நெல்லில் இருக்கிற ஏழ்மை இடர்குவிக்கத்
தொழுதிடும் தெய்வம் துணைசெய வாரா தொளிகிறதே!
*
கிழக்கினைத் தேடிக் கிளர்ந்தெழு கின்றக் கிரணமென
வழக்குகள் தீர்ந்து வருகிற வாழ்க்கை வசந்தமுற
அழகியக் காலம் அனைவருக் குள்ளும் அடர்ந்துவரச்
சுழன்றிடும் பூமிச் சுகங்களைத் தந்தாற்ச் சுமையிலையே!
*
*மெய்யன் நடராஜ்
02-12-2022
நட்புக்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Dec-22, 3:18 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 96

மேலே