கனவு மெய்ப்பட வே‌ண்டு‌ம்

அறிவில் தெளிவு வே‌ண்டு‌ம் - மனக்
குழப்பம் தெளிந்திட வே‌ண்டு‌ம் !

ஏழ்மை ஒழிந்திட வே‌ண்டு‌ம் - அது, இளைஞர்தம்
எழுச்சியில் நடந்திட வே‌ண்டு‌ம் !

தீர்வு கிடைத்திட வேண்டும் - உழைக்க, 
வேலை என்னும் நல்ல
தீர்வு கிடைத்திட வேண்டும் - அதனால்
சோர்வு மரித்திட வேண்டும் - தின்ற
சோறும் செரித்திட வேண்டும் !

தூக்கம் கலைக்கும் கனவுகள் வேண்டும் - எதிர்காலம்,
ஏக்கம் கொள்ளும் நிகழ்வுகள் வேண்டும் !

செல்வம் கிடைத்திட வேண்டும் - மலிவாய் கல்விச் செல்வம் கிடைத்திட வேண்டும் !

விதைகள் ஊன்றிட வேண்டும் - நல்ல
மேதைகள் கொண்டு
விதைகள் ஊன்றிட வேண்டும் !

ஆயிரம் ஆண்டுகள்
தாண்டியும் செழிக்கும்
போதி மரத்தின்
விதைகள் ஊன்றிட வேண்டும் !

ஆறுதல் கூற,
அன்னைகள்
அருகினில் வேண்டும் !
யோசனை கேட்க,
தந்தையும்
தன்னோடு வேண்டும் !

நட்பெனும் தூண்டுகோலும்
துணை எனும் ஊன்றுகோலும்
இன்று போல் என்றும் வேண்டும் !

பல நூறு சிந்தனை ஓடைகள்
ஒன்றாகி
மகாநதியாய் ஓடிட வேண்டும் !

காலம் கனிய வேண்டும்
மனதில் பேதம் தணியும்
காலம் கனிய வேண்டும் !

ஞாலம் முழுதும் வேண்டும்
எம் பிள்ளைக்கு -
நோயில்லா போரில்லா
ஞாலம் முழுதும் வேண்டும் !

கனவு மெய்ப்பட வேண்டும் - பாரதி, உன்
கனவு மெய்ப்பட வேண்டும் !

உன் மொத்தத் தீயில்
சொட்டுத் தீ தா,
எங்களால் உன்
கனவு மெய்ப்பட வேண்டும் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (11-Dec-22, 3:54 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 44

மேலே