தூது விடுத்ததோ தூயதாம் காதலைத் தென்றல் - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)
சேதி சொல்லியே செறிந்திடும் பொழுதினில் நிலவே;
பாதி விழியுமே பாந்தமாய் மூடியு மிருக்கத்
தூது விடுத்ததோ தூயதாம் காதலைத் தென்றல்;
போத விழ்மொட்டே புன்னகை செய்மன மிலையோ!
- வ.க.கன்னியப்பன்