கண்ணீர்த்துளிகள் வந்து செல்லுதடி 555

***கண்ணீர்த்துளிகள் வந்து செல்லுதடி 555 ***


உயிரே...


வார்த்தைகளால் நிரப்ப
முடியாத என் நேசத்தை...

உனக்கு
எப்படி புரியவைப்பேன்...

நான் விதைத்த காதல் விதை
பெரிதாக வளரவில்லை...

நீ விதைத்த
வலிகள் என்னும் விதை...

விருட்சமாய் வளர்வது மட்டும்
எப்படியோ தெரியவில்லை...

தவிக்கும்
என் நினைவுகளில்...

உன் நி
னைவுகள் மட்டும்
எப்படி தளும்பாமல் இருக்கிறது...

பனி படர்ந்த
காலை நேரத்தில்...

சாலையோர புற்களில்
தூங்கும்
பனித்துளி பார்க்கும் போதெல்லாம்...

என் இமை ரோமத்தில்
பலநேரம் வந்து செல்லும்...

கண்ணீர்த்துளிகள்
நினைவில் வந்து செல்லுதடி...

நீ மூச்சுவிடும்
தூரத்தில் நான் இல்லை..

உன்னை காணாததால் என்
விழிகளும் எனக்கு சுமைதாணடி...

பூக்களை ரசித்தவன்
உன்னை ரசித்ததால்...

இன்று பூக்களையும்
ரசிக்க மறந்தேன்...

உன்னை மட்டும்
மறக்கவில்லை
இன்றுவரை.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (15-Dec-22, 9:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 391

மேலே