கால - தேக - திரவிய – அவிரோத பதார்த்தம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எல்லாக் கறிகளுமே யெல்லுக்கா மல்லுக்கா
மெல்லாக் கறிகளுமெல் லார்க்குமாம் - பொல்லாக்
கறிகளுக்குச் சத்துருக லந்தமைத்து நன்றாங்
கறிகளுக்குள் வைத்தருந்துங் கால்

- பதார்த்த குண சிந்தாமணி

மேற்சொன்ன தோடமுள்ள கறிகாய்களை நல்ல பொருட்களுடன் சேர்த்துண்டால் இரவு, பகல் இருகாலத்தும் எல்லோரும் உண்ணலாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-22, 8:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே