இவ்வித நோய்க்குத் தாம்பூலங் கூடாதெனல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மதமூர்ச்(ச)ர ரோக மகாசந்தி பாத
மதிரூட்சை சுட்கநோ யாறா - முதிர்விடங்கள்
பித்தங் கயஞ்சிரநோய் பேசுமிவைக்(கு) ஆகாது
சுத்தந்தாம் பூலமெனச் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

மகோதரம், மூர்ச்சை, சன்னி, தாபச்சுரம், தேகத்திலூறிய விடம், பித்தம், சயம், தலை நோய், ஆகிய நோய்களுள்ளோர் தாம்பூலம் அருந்தலாகாது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-22, 11:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே