சொட்டு நீரில் இரு கவிதைகள்
குடிநீர் குழாயிலிருந்து
ஓடி கொண்டிருக்கும்
குடி நீர் குழாயில்
ஏதோ ஒரு பக்கம்
கீறலாய் கசிந்து
நடுவுக்கு
நகர்ந்து வந்து
கூடி கலந்து
உருண்டு திரண்டு
சொட்டு சொட்டாய்
கீழே விழுகிறது
நீர்
குடை மேல் விழும் மழை நீர்
தலை உச்சியில்
முளைத்த
குடை மேல்
சாரலாய் விழும்
மழைநீர்
அதன் சார
கம்பியை பிடித்து
தொங்கியபடி
உருண்டோடி வந்து
சொட்டு சொட்டாய்
கீழே விழுந்து
குடை கீழ்
நின்றவனை
சுற்றி வர
நீர் வட்டம்
வரைந்து
கரைந்து ஓடி
செல்கிறது