மது ஒழிப்பு

மதியுள்ளவர் நாடார்
மதுவின் வாசம்;
மதியிழந்தவர் போவார்
மதுவால் நாசம்.

மிதப்பதில் தொடங்கி
மூழ்குவதில் முடியும்
மதுவெனும் திரவம்
மானுடத்துக்கு உபத்திரவம்.

பணிமுடித்தக் கூலியோ
மதுபானங்களில் தொலையும்.
அருந்துபவன் ஆயுளோ
ஆல்கஹாலில் கரையும்.

பஞ்ச மாபாதகங்களில்
மதுப் பழக்கமும் ஒன்று
விட்டு வெளியேறு;
வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்று.

அரசுக்கு மது வருமானம்
அதனால் இல்லையோ அவமானம்?
நீங்களாய் பார்த்து நிறுத்தினாலன்றி
சேமிப்பாகுமோ உங்கள் வருமானம்?

தலைமுறைகளைத்
தள்ளாடவைக்கும்
பொல்லாத மதுவை
இல்லாத நிலையாக்கிட
பரப்புரை செய்திடுவோம்
புத்துலகுப் படைத்திடுவோம்.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (5-Jan-23, 8:07 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 39

மேலே