அன்னம் நீந்திட அங்குள குளமது சிறக்கும் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(1, 3 சீர்களில் மோனை)

தென்றல் வீசிடத் தேன்துளி பெருக்கிடும் பூக்கள்;
பொன்னின் புகழுடன் பொழிலினில் பூத்திடும் மலர்கள்!
அன்னம் நீந்திட அங்குள குளமது சிறக்கும்;
உன்னைக் காண்பதால் உளமெலாம் இன்பமே பொங்கும்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-23, 12:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே