பூவிதழ்நீ மெல்லத் திறந்து சிரித்தால்

காவியத்தில் உன்னை எழுத எனக்கு
-----கம்பனின் விருத்தம் தேவை இல்லை
ஓவியமாய் உன்னைத் தீட்டிட ஒப்பற்ற
------புகழேந்தியின் வெண்பா தேவை இல்லை
பூவிதழ் மெல்லநீ திறந்து புன்னகைத்தால்
------பொதிகைத் தமிழ்புதுக் கவிதையாய் கொட்டுதடி
தேவிஏன் தாமதமின்று அந்தியோடு நானும்
----காத்திருக்கிறேன் விரைந்து நீயும் வாராயோ


காவியத்தில் உன்னை எழுத எனக்கு கம்பனின் விருத்தம் தேவை இல்லை
ஓவியமாய் உன்னைத் தீட்டிட ஒப்பற்ற புகழேந்தியின் வெண்பா தேவை இல்லை
பூவிதழ் மெல்லநீ திறந்து புன்னகைத்தால் பொதிகைத் தமிழ்புதுக் கவிதையாய் கொட்டுதடி
தேவிஏன் தாமதமின்று அந்தியோடு நானும் காத்திருக்கிறேன் நீயும் விரைந்து வாராயோ

----ஒரே அடி எதுகை எண்சீர் தேவையில்லை என்று சொன்ன யாப்பும் வந்து
புன்னகை பூக்குதடி பொதிகைத் தமிழில்

காவியத்தில் உன்னை எழுத எனக்கொரு
கம்பன் விருத்தம்தே வைஇல் லவேஇல்லை
ஓவியமாய் தூரிகையில் தீட்ட புகழேந்தி
வெண்பாவும் தேவை எனக்குத்தான் இல்லையே
பூவிதழ்நீ மெல்லத் திறந்து சிரித்தால்
பொதிகைத் தமிழ்கொட் டுதுப்பார் புதுக்கவிதை
தேவிஏன் தாமதமோ காத்திருக்கி றேன்நானும்
அந்தியோடு வாராயோ நீ

----தேவை இல்லை என்றாலும் பொதிகைத் தமிழின் யாப்பு
வந்து பொழியுதடி புன்னகையின் அதிசயமோ
பொதிகைத் தமிழின் அதிசயமோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jan-23, 6:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 136

மேலே