அதீத அந்திவான் அழகினை வென்றிடும் எழில் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பொதிய மலைத்தமிழ் பொலிந்திட வந்தவோர் கவிதை
மதிநு தல்மாலை மயக்கிடும் மஞ்சளின் பொழுதில்
நதிநை லின்னெழில் நவின்றிடும் விழியதன் அழகில்
அதீத அந்திவான் அழகினை வென்றிடும் எழில்,நீ!

– வ.க.கன்னியப்பன்

கருத்து உதவி: திரு.கவின் சாரலன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-23, 8:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே