அதீத அந்திவான் அழகினை வென்றிடும் எழில் - கலித்துறை
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
பொதிய மலைத்தமிழ் பொலிந்திட வந்தவோர் கவிதை
மதிநு தல்மாலை மயக்கிடும் மஞ்சளின் பொழுதில்
நதிநை லின்னெழில் நவின்றிடும் விழியதன் அழகில்
அதீத அந்திவான் அழகினை வென்றிடும் எழில்,நீ!
– வ.க.கன்னியப்பன்
கருத்து உதவி: திரு.கவின் சாரலன்