கனவிலிருந்து

கனவிலிருந்து
பூக்களை பறிக்க முயல்கின்றன
என் விரல்கள்

வெதுவெதுப்பான உன் முத்தத்தின்நெடி எனதறையில் குமிழும்
இரவாக நீடித்திருக்கின்றது

அன்பே
மிருதுவான நமது
தலையணைகள்
கனத்த பாறையாக இறுகி போயிருக்கின்றன
இன்று

சாம்பலான பொழுதின்
கனியும் மழை
அணையாத தீப்பிழம்பாக
உடலை சுடுகின்றது

உன் மீளாத சொற்களின்
நீர்வீழ்ச்சியில்
என் மூளையும் கரைந்ததா?

கிழிந்த போர்வைக்குள்
இல்லாத உன் உடலை
கனவெங்கும்
போர்த்தி கொள்கிறேன்

எழுதியவர் : S.Ra (17-Jan-23, 9:19 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : kanavilirunthu
பார்வை : 87

மேலே