மூவர்ணக் கொடி பறக்குது

மூவர்ணக் கொடி பறக்குது

மூவர்ண கொடி பயமே அறியாது பறக்குது பார் வானிலே
முப்படை வீரர்கள் காக்க உள்ளார் என்ற பெருமையுடனே
மூத்த தலைவர்கள் யாவரும் செய்த தியாகத்தை பறைசாற்றி
முன் நிற்கும் யாரும் எனக்கு எதிலும் ஈடில்லை எனக் கூறி
மூவேந்தர்கள் கட்டிக்காத்த நாட்டை சுதந்திரமாக கண்டு களிக்க
வருகை தந்த பன்னாட்டு தலைவர்கள் தனக்கு வணக்கம் செலுத்த
வான வீதியில் விமானங்கள் வர்ண ஜாலங்கள் பல செய்ய
வாழும் மக்கள் கூட்டம் அலையாக வந்து நன்றி தெரிவிக்க
எங்கும் பட்டொளி வீசிக் கொண்டு பட படவென்று காற்றில்
பறக்குது பார் வந்தே மாதரம் வாழ்க பாரதம் என கூவி கொண்டு
நாமும் கொடியை மதிப்போம் காப்போம் வரலாறு படைப்போம்

எழுதியவர் : கே என் ராம் (22-Jan-23, 11:01 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 37

மேலே