தருவனம்

ஓரறிவே படைத்த மரங்கள் கொண்ட
கானகம் தருவனமாய் நமக்கு அள்ளிஅள்ளி
தருகின்றது பூவாய்க் காயாய் கனியாய்
இன்னும் பயன்தரும் நல்மரமாய் இன்னும்
நம்மை வாழவைக்க ப்ராணவாயுவும் தந்து
மானிடர் நாமோ நமக்கென்றே எல்லாம்
என்ற சுயநலத்திலே வாழ்கின்றோம் இல்லாதற்கு
தருவோம் என்ற மனம் இல்லாது அதனால்
கானகம் உனைக்கண்டு வியக்கிறேன்
உன்போல் பரந்த மனம் எனக்கும்
வந்தமைய ஈசனை வேண்டி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Jan-23, 4:49 pm)
பார்வை : 54

மேலே