யென் கவி யெனும் கிறுக்கலும்

என்னவளின் வருகையால்
மணக்கும் மண் ...அவளின்

மலர்விழி பார்வை மயக்கம் தர
மிரளும் மான் கண் அச்சாரமிட

வில்வித்தை புருவம் காதல்கதை எழத
சொல் வித்தை சொக்கட்டான் இட

ஊர்குருவிக்கு உரக்க உரைக்க
தேர் வீதியில் தெருவோர கடையில்

வளையல் வாங்கி தர தையல் அவளை தனியாக தேடியது கண்

வந்தாள் புடைசூழ தோழியருடன்
தந்தாள் கண்ஜாடை கருத்துடன்

சென்றேன் அவள் பின் மறைந்தாள் சடுதியில்...

சத்தமிட்ட யென் மனைவி யால்
சடுதியில் எழுந்தேன் என்னங்க

எனும் மந்திரச் சொல்லால்
தெளிந்தது நித்திரை மட்டுமல்ல

யென் கவி யெனும் கிறுக்கலும்...


அவளை கண்டால் எழுதுவேன்
இதயத்தில் இருப்பதையே...

எழுதியவர் : பாளை பாண்டி (31-Jan-23, 9:43 pm)
பார்வை : 94

மேலே