-ஏன்னு தெரியல -

-ஏன்னு தெரியல -

என் அன்பு அழகியே ....!

ஓம்....
ரெட்ட சடையில,
வெட்டு நடையில.,
கெட்டுப்போன மனம்
கிறுக்கு புடிக்குதே !.

கூந்தல் கலைக்கிற
அதுவும் அழகுதான் .
கோனிநடக்குற
அதுவும் அழகுதான்.

இது ...,
காட்சிப்பிழையினு
கடந்துபோகவா ?
இல்ல ...,
மூச்சு இறைக்க ஒன்ன
நானும் தொரத்தவா ?!.

தெருவோர கடையில
தேநீர் அறுத்துறேன் ,உன்
தீண்டும் பார்வைய
தேடி தவிக்கிறேன் .

சவுக்க சொழட்டிநீ
நொடியில் அடிக்கிற ,
சுருக்கு சுருக்குனு ,ஓ
நெனப்ப ஊத்துற .

எதுக்கு பிறந்தேனு
எனக்கு தெரியல
ஒனக்கு புடிக்கல .அது
ஏன்னு புரியல .

விரட்டி அடிக்கிற -நான்
காட்டு மிருகமா ?
மனம் ஒன்னசுத்துதே
காதல் அரும்புமா jQuery17105144254281373617_1675263492794?!

-கங்கைமணி -

எழுதியவர் : கங்கைமணி (1-Feb-23, 8:25 pm)
சேர்த்தது : கங்கைமணி
பார்வை : 186

மேலே