தலை சாய்ந்த பின்னே

.

கன்னிப் பெண்ணைக்
கைப்பிடிக்க
முரட்டுக் காளையை அடக்கி
வாகை சூடும்-இந்த
வீரவிளையாட்டு
தமிழ் மண்ணுக்கே உரிய
பண்பாட்டுச் சின்னம்

கட்சித் தோழர்களை
அடங்காத காளையென
அரிவாளால் வெட்டி சாய்ப்பது
வீர விளையாட்டா?
இல்லை அரசியலின்
ஈனச் செயலா?
அரியனை ஏற ஒரு வழியா?

இந்திய மண்ணில்
இறையான்மை
இல்லாமல் அழியுதோ !
ஏன் இந்த அவல நிலை ?
இந்தியப் பண்பாடு
தலை நிமிர்ந்து நிற்குமா ?
தலை சாய்ந்த பின்னே.

எழுதியவர் : கோ. கணபதி. (4-Feb-23, 5:04 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 30

மேலே