நீயில்லா வெறுமை
நீயில்லா வெறுமை!!!
கனவின் விம்பமாய் என்னுடனே நீயிருப்பாய்!
உனைக்காணாத நாளெல்லாம் துன்பத்தில் நானிருப்பேன்!
நீயில்லாத் தருணங்கள் மரண வேதனைதான்!
நானிலத்தில் அதுவோர் இருளடைந்த வெறுமைதான்!
எனைவிட்டும் வெகுதூரம் தொலைந்தே செல்லாதே!
என்னுள்ளம் ஒரு கணங்கூட அதை ஏற்காதே!
என் உலகத்தில் நீதானே பேரழகி!
நீயில்லா வாழ்வில் எனக்கேது நிம்மதி!
வா என்னுயிரே உலகைக் கொண்டாடிடலாம்!
நாமிருவர் சேர்ந்தே காதலை வென்றிடலாம்!