வானவில்லில் ஓர் உண்மை

மேற்கே மலைக்குப் பின்னே வேகமாய்
மறைய பார்க்கும் கதிரவன் மறையுமுன்
எதிரே கீழ்வானில் மிதந்து வரும்
மலை மேகத்தை முத்தமிட்டு செல்ல
வானில் வந்தமைந்தது வண்ணக் கோலம்
பார்ப்போரை என்றும் ஈர்க்கும் வானவில்
வானில் இருக்கும் வரை அது
உண்மைக் கோலமே மறைந்து விட்டால்
வெறும் ஜாலமே நம் வாழ்க்கையில்
எல்லாம் இருந்தும் இல்லாது போகும்
நிலைதான் நிலையற்ற வாழ்வு ஆகா
நிலையானது என்றும் 'அவன்' பாதமே
நாடிடுவோம் அவன் பாதம் போற்றி
விட்டிடுவோம் வேண்டா அகங்காரங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Feb-23, 8:13 am)
பார்வை : 92

மேலே