எழுஎழு தமிழா

எழுஎழு தமிழா!

எழுஎழு தமிழா விழித்தெழு – உனை
அழுத்திடும் சோம்பலை பலியிடு
இரண்டினில் ஒன்று முடிவெடு – உனை
மிரட்டிடும் தடைகளை அழித்திடு

காலங்கள் உனக்குத் துணையாகும் – புது
கோலம்கொள் தடைகள் தூளாகும்
ஞாலமுன் அறிவால் ஒளிபெறட்டும் – உன்
சீலத்தை காசினி கைதொழட்டும்

முன்னேறி செல்லும் மனம்கொண்டு – நீ
,இன்றே தொடங்கு உன்பணியை
எண்ணிய எண்ணம் ஈடேறும் _ உன்
திண்ணிய நெஞ்சால் விதிமாறும்

கண்ணியம் உனக்கு உறவாக – உன்
கடமைகள் உயர்வுக்கு எருவாக
சூதுகள் அனைத்தும் பறந்தோடும் – உன்
சூத்திரம் கண்டு பகைமாறும்

தடைகளை உடைத்து படியாக்கு – அதில்
மடைபல அமைத்து வழியாக்கு
நடையினில் நீதியை நிலைநாட்டு _ இந்த
நானிலம் செழிக்க வழிகாட்டு.

சொ. பாஸ்கரன்
ஆண்டிமடம்

எழுதியவர் : (5-Mar-23, 9:03 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 25

மேலே