எண்ணலையே

விவசாயி ஒருவர்
வீட்டு தோட்டத்தில் தினமும்
பாடுபட்டு உருவாக்கிய
பழத்தோட்டம் ஒன்றில்
பழுத்துத் தொங்கும் பழங்களைப்
பார்த்து பூரித்து போனார்

காட்டுக் குரங்கு ஒன்று
காய்த்துக் குலுங்கும்
கனிகளைக் கண்டு
கொள்ளை யிடுகிறது,
இப்படித் தான் நாட்டிலும் பலர்
உழைக்காமல் திருடி வாழ்கிறார்கள்

அடுத்தவர் பொருளை திருடி
உயிர் வாழும் மனிதர்களை
இன்றைய சமுதாயத்தில்
எங்கும் காணலாம்,
ஊழல் புரிவதும், அதிக வட்டி
வாங்கி வாழ்வதும் வழக்கமானது

உரிமையில்லாத ஒன்றை
அதனைப் பெற விரும்பி
கொள்ளையடிப்பது, திருடுவது
குரங்கின் குணமானாலும்
சட்டத்திற்கு புறம்பானது என
வாழும் மனிதன் எண்ணலையே

எழுதியவர் : கோ. கணபதி. (7-Mar-23, 4:17 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 34

மேலே