மனதில் தாங்கினேன்

கண்ணே உன்னைத் தேடினேன் - என்
கண்ணில் வைத்தே தூங்கினேன்.
காதல் நோயால் வாடினேன் - உன்
காதில் சேர பாடினேன்.
பெண்ணே உன்னை நாடினேன் - மனம்
விண்ணில் பாய ஓடினேன்.
கண்கள் காண தயங்கினேன் - மனப்
புண்கள் ஆற ஏங்கினேன்.
நெஞ்சில் ஓவியம் தீட்டினேன் - உன்னை
கொஞ்சி காவியம் கூட்டினேன்.
விழியினில் அன்பை தேக்கினேன் - உன்
வழியினில் பூக்களை தூவினேன்.
மொழியினில் தேனைத் தடவினேன் - விழும்
பழிஎல்லாம் மனதில் தாங்கினேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Mar-23, 7:33 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 186

மேலே