பேரும் புகழும் அடையணும்

அறிவுகாட்டும் பாதையிலே அன்றாடம் போகணும்
ஆணும்பெண்ணும் சூழ்நிலையை அனுசரிச்சே நடக்கணும்
அனைவருமே உயர்ந்துவாழ ஆர்வத்தோட உழைக்கணும்
அடுத்தவரின் உழைப்பிலுண்ண அடியோடு வெறுக்கணும்

சாதிசமய பிரிவுகளைக் கேட்கும்நிலை மாறணூம்
சின்னபுத்தி மாறிநாட்டில் சமாதானம் மலரணும்
அர்த்தமற்ற சடங்குகளை அடியோடு ஒழிக்கணும்
அனைவருக்கும் பகுத்தறிவு பாடங்களை புகட்டணும்

உறவினோடு நட்பினோடும் உண்மையாக இருக்கணும்
உள்ளிருக்கும் பகமைநீங்கி ஊள்அன்போடு பழகணும்
உலகபொது மறையின்படி வாழ்வுதனை அமைக்கணும்
உள்ளதெல்லாம் பொதுவில் வைத்து சங்கடத்தை தவிர்க்கணும்

காலைநேரம் கண்விழித்து கடமையிலே மூழ்கணும்
கைத்தொழிலும் கற்றுக்கொண்டு கவலைகளை வெல்லணும்
மற்றவர்கள் மனம்மகிழ சேவைகளும் செய்யணும்
பெற்றவரைப் பேணிகாத்து பேரும் புகழும் அடையணும்

சொ. பாஸ்கரன்
விளந்தை

எழுதியவர் : பாவலர் . பாஸ்கரன் (13-Mar-23, 9:43 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 85

மேலே