பெண்நிலா நீல வானில்

சிந்தியல் பாடல்


நீல வானில் நீந்தியோடும்
காலிலா பால்நிலா தானும்
நிலத்தை குளிர்சி செய்து
கலங்கா நிற்கும் நல்பூங்கா
வில்பொழித் தடாக பிம்பம்
நல்சித் திரமடி கண்ணே
நில்லங்கே வைக்க நின்காலை
பொல்லாங்கு வென்நிலா போகும்
கலைந்து மென்ற தடாகம்


இந்த அழகான கற்பனை தம்பி கவின் சாரலர் எழுதியது
அவருக்குப் பாராட்டுக்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (14-Mar-23, 9:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 115

மேலே