அல்லதை மறந்தால்
அல்லதை மறந்தால் வல்லது தொடரும் !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
நல்லது நிறைந்த
நானிலம் தன்னில் /
அல்லதை மறந்தால்
வல்லது தொடருமே/
இருளும் ஒளியும்
இருந்திடும் எனினும் /
மருளா மனத்தோர்
இரவினை விரும்பார்/
இன்றைய நன்மை
இயம்பிடும் புகழை /
என்றுமே உலகம்
ஏற்றிடும் உன்னை /
பிறப்போ ஒருமுறை
பிழைப்போம் பிறர்க்காய் /
மறுப்பே இல்லை
மாண்புதான் வாழ்விலே!!
-யாதுமறியான்.