அல்லதை மறந்தால்

அல்லதை மறந்தால் வல்லது தொடரும் !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நல்லது நிறைந்த
நானிலம் தன்னில் /

அல்லதை மறந்தால்
வல்லது தொடருமே/

இருளும் ஒளியும்
இருந்திடும் எனினும் /

மருளா மனத்தோர்
இரவினை விரும்பார்/

இன்றைய நன்மை
இயம்பிடும் புகழை /

என்றுமே உலகம்
ஏற்றிடும் உன்னை /

பிறப்போ ஒருமுறை
பிழைப்போம் பிறர்க்காய் /

மறுப்பே இல்லை
மாண்புதான் வாழ்விலே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (15-Mar-23, 8:29 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 39

மேலே