சமஞ்சிருக்கா பொண்ணு..

அடி நெஞ்சம்
தவிக்கும் அவளை
நினைத்தே துடிக்கும்..

கத்திரிக்காய் தோட்டத்துல
கபடி நாம் ஆடையில்ல
வயிற்று வலின்னு
உட்கார்ந்தவளே..

பச்ச புள்ள போல
பரிதவிக்குதடி மனசு
எழுந்து நீயும் நடக்கையில..

ஈரம் வந்து
ஒட்டுதடி உன்னில்
என்ன என்று தெரியாமல்
நான் தவிக்க..

சமஞ்சிருக்காபொண்ணுனு
நாலு பேரு சொல்ல
அது கூட என்னன்னு
தெரியாம என்னடி..

திக்கு தெரியாம
தெரிஞ்ச நெஞ்சமெல்லாம்
என் மனசால வந்தத
தேவதை நீயடி..

எழுதியவர் : (18-Mar-23, 10:25 pm)
பார்வை : 22

மேலே