யார் தந்த பட்டயம்

நேரிசை வெண்பா



இலக்கணம் இல்லா தெழுதிடப் பட்டம்
இலகுக் கவிப்புயல் ஈந்தார் -- விலக்கார்
இலக்கணமில் லையென்று இன்றும் அறியார்
பலரும் இலக்கணம் பாரு


இலக்கணம் இல்லாது பெருமைக்கு எழுதினாலும் கல்லான்
கரைந்து உருகி அவனை கவி குரு என்பான் கவிப்புயல் என்று
பட்டம் கொடுப்பர். இது என்ன பல்கலைக் கழக பட்டமா ?
எழுதியவன் மாயையில் உழன்று தன்னைத் கவிதைப்புயல்
என்றும் கவிக்கு குரு என்றும் தன்னைத்தானே அழைத்துத் திரிகின்றான்..

எழுதியவர் : பழனி ராஜன் (24-Mar-23, 11:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 19

மேலே