மேகத்தின் மோகம்
என் இனியவளே
மண்ணிலே அன்னம் போல்
நீ நடந்து செல்கையில்
விண்ணிலே வேகமாக
செல்லும் மேகங்களும்
உந்தன் அன்னநடைக்கு
தடைவராமல்
குடைபிடித்த வண்ணம்
மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்லுதே
மேகமும் உந்தன் அழகில்
மோகம் கொண்டு விட்டதோ...!!..??
--கோவை சுபா