கோளென்று சொல்வேன் குறித்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
உண்ணல் உடுத்தல் உறங்கலென்றே தானொருவர்
கண்கள் சொருகக் களித்திருத்தல் – வண்ணமோ?
நாளெல்லாங் கண்விழித்து நால்வர்க் குதவிடலே
கோளென்று சொல்வேன் குறித்து!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
உண்ணல் உடுத்தல் உறங்கலென்றே தானொருவர்
கண்கள் சொருகக் களித்திருத்தல் – வண்ணமோ?
நாளெல்லாங் கண்விழித்து நால்வர்க் குதவிடலே
கோளென்று சொல்வேன் குறித்து!
- வ.க.கன்னியப்பன்