யாதும் வெற்றியே
சில உதடுகள் ஒன்று சேராமல் இருப்பது தான்
பல செவிகளுக்கு இனிமை...
சுற்றத்தை கேளாமல் இருப்பதே மனச்சோர்வுக்கு முற்று புள்ளி....
கற்றதை கற்பனை என்று நினைத்தால் மற்றவையும் மறந்து போகும்....
வேற்றுமை காண்பவரிடத்தில் உனக்கு வேளை இல்லை...
சீற்றத்தில் எடுக்கும் முடிவு முற்று பெறாது
ஏற்றம் காண யாதும் வெற்றியே என்று ஏற்றுக்கொள்.....
-இந்திரா