குருவே சரணம்
யாதுமாய் நின்ற தனிப்பெரும் தெய்வம்
அன்னை அபிராமி தாளில் தலைவைத்தோம்
அவள்மீது அந்தாதி பாடிய பட்டர் அருளினாலே
தாயாய்த் தந்தையாய் நின்ற தனிப்பெரும் தெய்வமாம்
மாயோன் கண்ணன் தாள்களில் சிரம் வைத்தோம்
திருக்குருகூர் சடகோபன் பேரருளாலே
அதனால் அறிவோம் நல்லாசான் நமக்கு
இறைவழி காட்டி அவன் பாதம் சேர்த்திடுவான்
குருவே சரணம் குருவே சரணம்