பழந்தமிழரும் இயற்கையும்

சித்திரையில் வைகாசியில் பூத்து குலுங்கும்
வேம்பும் மாவும் வேப்பம் பூ கசப்பு
மாவோ பூத்து காய்த்து புளியும் இனிப்பும்
என்ன என்பதை மாதர் குணர்த்தும்
சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் பரிமாறும்
அறுசுவை உணவில் மாங்காய்ப் பச்சடி
வைப்பர் அதில் வெல்லமும் வேப்பம்பூவும்
உண்டு இனிப்பும் புளிப்பும் கசப்புமாய்
வாழ்க்கை என்பதை உணர்த்த அன்று
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார் தமிழர்
இன்றோ தமிழ்ப் புத்தாண்டையே அல்லவோ
இவர் இட்டம்போல் மாற்றுகிறார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (20-May-23, 1:21 am)
பார்வை : 22

மேலே