கவிஞன் நான்
யாரிந்தக் கவிஞன்
பூமியில் வளர்கிறேன்
இலக்கணங்கள் அறிந்து
வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்
யார் கண்
முன்பும் தெரியாமல்
எதுகைமோனையோடு என்னையும்
சேர்த்துக் கொள்கிறேன்
சொந்தங்கள் எல்லாம் சிந்தாய் பாடிட
இன்னும் எப்படிதான்
எழுத வேண்டுமோ
அடுத்துவர் முன்
நான் தென்பட
யாரும் அறியாது
வலம் வருகிறேன்
என்னுள் பிறந்த
திறமை வெளிவருமோ
எவரை நாட
ஒன்றும் புரியாமல் 1
தத்தளிக்கிறேன் தரணியில்
நானும் கவிஞன்
எனக்கான அங்கீகாரம்
கிடைத்து விடுமோ
பரமகுரு பச்சையப்பன்