இராமன் கருடனைப் புகழ்தல் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

ஆரியன் அவனை நோக்கி,
..‘ஆருயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்;
..கருணையோர் கடமை ஈதால்;
பேரிய லாளர், “செய்கை
..ஊதியம் பிடித்தும்”என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மா(று)
..இயற்றுமோ, வையம்? என்றான்! 271

- நாகபாசப் படலம், யுத்த காண்டம் கம்பராமாயணம்

எழுதியவர் : கம்பர் (5-Aug-23, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே