கவியரசர் கண்ணதாசனைக் கொண்டாடுவோம்

கவியரசரை கண்ணதாசனைக் கொண்டாடுவோம்

கண்ணதாசன் பாடல்களைக் கேட்டுகண்கள் மூடி ரசிக்கையில்
கண்ணீரை வரவழைத்து நெஞ்சினுள் உணர்வைத் தூண்டியதே
காலம் செல்வது அறியாமல் அக்கவிதைகள் இதயத்தை வருடிட
கண்ணியமாக கவி காதலையும் கடவுளையும் வர்ணித்ததை
காதில் கேட்டு மனதில் இருத்தி பாராட்டும் வேளையில்
கற்பனைகள் பல மனதில் தோன்றி கண்முன்னே ஆட்டம் போட
காண்பது நிஜமோ நிழலோ என்று எண்ணி நெஞ்சம் துடித்திட
கனவுதான் என்று உள்மனம் கூறிடும் அந்த சில நிமிடங்களில்
கனவு அளித்த அந்த சுகத்தை அனுபவித்து உள்ளன்போடு
கவியரசரை எண்ணி உங்கள் இதயம் துடிக்காமல் இருக்கலாம்
காலமெல்லாம் எங்கள் இதயம் உங்களை எண்ணித் துடிக்கும்
உள்ளத்தை தொடும் கவிதைகள் எழுதிய கவியரசரை வணங்கித் தொழுதேன்

எழுதியவர் : கே என் ராம் (17-Jul-24, 6:51 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 44

மேலே