கடலை கண்ட நதி
கடலை கண்ட நதி
எதிரே கண்ட
உருவத்தை கண்டு
திகைத்து நிற்கிறது
நதி ஒன்று
இதுவரை கடந்து
வந்த பாதை
முழுவதும் கர்வம்
கொண்டிருந்த நதி
தயங்கி தடுமாறி
மயங்கி நிற்க
அலையால் இழுத்து
அணைத்து
தன்னுடனே கூட்டி
சென்று விட்டது
கடல்

