உறுதுணையான உண்மையே

உறுதுணையான உண்மையே
என்றும் நன்மையே
பஞ்சராட்சரம் கூற
வரமாய் வந்த உள்ளுணர்வே
உன்னை துதித்து
உன் புகழ் பாடி
பரமசிவனே
அர்த்தநாதீஸ்வரனே
அன்பும் உறுதுணையும் நீயே
உன்னையே எண்ணியே
உன் பொற் பாதம் நோக்கி நான் வர
வரம் தந்த வள்ளலே
ஏக்கம் கலைந்த
ஏகாம்பரேஸ்வரா
கவலை அகற்றும்
கபாலீஸ்வரா
அர்த்தம் அறியவைத்த
அர்த்தநாதீஸ்வர
தீமை அகற்றிய
தீர்த்தபாலீஸ்வரா
மருத்துவனே
மருந்தீஸ்வரா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

எழுதியவர் : காவேரி நாதன் (8-Dec-25, 12:34 pm)
சேர்த்தது : KAVERINATHAN
பார்வை : 25

மேலே