நண்பன்டா !
என் மனது தேர்ந்தெடுத்த
ஒரு மந்திர புன்னகை !
இவன் வார்த்தைகளில்
வராத வாக்கியம் !
சந்தோசத்திற்காக என்றுமே
என்னை தத்தெடுத்தவன் !
துன்பத்தில் எல்லாம் தோள்
கொடுத்த சுமைதாங்கி !
உறவுகளையெல்லாம் கடந்த
ஒரு இறுக்கம் !
என் எல்லா நிலைகளிலும்
உறுதியுடன்............
என் இறுதிவரை ...........!!
-ஸ்ரீவை.காதர் -