முதுமை

வயதாகி விட்டது,
பார்வை பட்டுவிட்டது.

அமர்ந்தால் எழ இயலவில்லை,
எழுந்தால் நடக்க நாட்டம் இல்லை.

நடந்தால் போகும் வழி மனதில் இல்லை,
மனதில் வைத்தால் ஞாபகத்தில் இல்லை,

ஒரு வழியாக
ஞாபகம் வந்து,
தேடுகிறேன், தேடுகிறேன்,
பார்வை தெளிவோடே தேடுகிறேன்,
மூக்கு கண்ணாடியை.
அணிந்து கொண்டே!!!!





எழுதியவர் : கணேஷ்குமார் Balu (10-Dec-11, 2:18 am)
பார்வை : 255

மேலே